பிரதோஷம்
நித்ய பிரதோஷம் : பிறப்பற்ற நிலை
பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பின்
மாதப் பிரதோஷம் : தேய்பிறையில் வருவது
திவ்யப் பிரதோஷம் : முன் ஜென்ம பாவம் விலகும்.
தீபப் பிரதோஷம் : இல்லம் அமையும்
சப்தரிஷி பிரதோஷம் : திருவருள், குருவருள் அமையும்
மகா பிரதோஷம் : சனி விலகும்
உத்தம மகா பிரதோஷம் : சனியும், திரயோதசி திதியும்இணைவது
ஏகாட்ச பிரதோஷம் : வருடத்தில் ஒரு நாள் வரும் பிரதோஷம்
அர்த்தநாரி பிரதோஷம் : திருமணத் தடை - கணவன், மனைவி ஒற்றுமை
திரிகரண பிரதோஷம் : அஷ்டலட்சுமி அருள்
பிரம்ம பிரதோஷம் : முன் ஜென்ம பாவம் அகலும்
அட்சரப் பிரதோஷம் : பாப விமோசனம்
கந்தப் பிரதோஷம் : முருகப் பெருமானின் அருளும் சேர்த்து
சட்ஜ பிரபா பிரதோஷம் : அழகான மற்றும் அறிவான மழலை பிறக்க அருள்
அஷ்ட திக் பிரதோஷம் : புகழ் மற்றும் குறையாத செல்வம்
நவகிரக பிரதோஷம் : சகல சவுபாக்கியம்
துத்த பிரதோஷம் : ஈசன் திருவடி
பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று ஈசனை மனதார பிராத்தனை செய்தோமேயானால் பலன்கள் நிச்சயம்
உண்டு. சிவ சிவ என்று சிவ நாமம் சொன்னாலே மறுப்பிறவி இல்லை.
பிரதோஷத்தை எண்ணிக்கையில் பார்ப்பவர்களுக்குப் பலன்கள்.
மூன்று முறை தரிசித்தவர்கள் மூம்மூர்த்திகளான சிவன், விஷ்ணு,
பிரம்மா தெய்வங்களைத் தரிசித்தப் பலன்
ஜந்து முறை பிரதோஷத்தை தரிசித்தவர்களுக்கு நோய்கள் அண்டாது மற்றும் உடல் ஆரோக்யம் சீராகயிருக்கும்.
ஏழு முறை தரிசித்தவர்களுக்கு ஈசன்
திருமண தடையை நீக்கி அவர்களை
இல்லறத்தில் புகும் படி அருளுகிறார்.
பதினொறு முறை தரிசித்தவர்களுக்கு
எம்பெருமான் ஈசன் மனதுக்கும், உடலுக்கும் நல்ல வலிமையை தருகிறார்.
பதின்மூன்று முறை தரிசித்தவர்களுக்கு
இடர்பாடுகளைக் களைந்து நினைத்தையை நடத்தி கொடுப்பார்.
இருபத்தியொரு முறை தரிசித்தவர்களுக்கு தாம்பத்ய வாழ்வில்
மழலை செல்வத்தை அருளத் தயை புரிபவர்.
முப்பத்தி மூன்று முறை தரிசித்தவர்களுக்கு சிவாலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் செய்த பலனை அருளுவார்.
எழுபத்தி ஏழு முறை தரிசித்தவர்களுக்கு
யாகம் ருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்.
நூற்றியெட்டு முறை தரிசித்தவர்கள்
தேவாதி தேவர்களை வணங்கிய பலனைப் பெறுவர்.
நூற்றி இருபத்து ஒன்று முறை தரிசித்தவர்களுக்கு மறுபிறவி ஒன்று என்றுமே இல்லை என்பது தான் பலன்.
ஆயிரத்தெட்டு முறை தரிசித்தவர்களுக்கு அஸ்வமேத யாகம்
செய்த பலன்.
குறிப்பு : கால இடைவெளி விட்டு விட்டுத் தன் இஷ்டம் போல்
பிரதோஷ தரிசனத்தை கண்டவர்களுக்கு இந்தப் பலன்கள் பொருத்தமாகாது.இருந்தாலும் சிவதரிசனம் கண்களுக்கு எப்போதும்
இனிய விருந்து, மனதுக்கு மாமருந்து.இந்தப் பதிவை நான் பதிவு செய்யும் நாள் பிரதோஷம், எல்லாம் எம்பெருமான் ஈசன் செயல், அவனின்றி ஒரு அணுவும் அசையாது.
ஓம் நமசிவாய சிவாயநம சிவசிவ.
பிரதோஷ நேரத்தில் மேலும் ஈசன் போற்றி கீழே இணைப்பு சொடுக்கவும்
ஈஸ்வர லிங்கம் நூற்றியெட்டு போற்றி
https://sivaneysakthi.blogspot.com/2019/09/blog-post_32.html
0 கருத்துகள்